search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் பாதிப்பு"

    • மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர்.
    • சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதமாக, வழக்கத்தைவிட கூடுதலாக கஞ்சா விற்பனை நடந்தவண்ணம் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு வந்தனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, சிறு, சிறு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்துவந்தனர்.

    ஆனால், இவர்களுக்கு மொத்தமாக சப்ளை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்யாமலே இருந்துவந்தனர். இந்நிலையில், காரைக்காலை அடுத்த நிரவி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற விஷ்ணு பிரியனை கடந்த வாரம் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவரது நண்பர் ரஜினி சக்தியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த கோழி என்ற ரஞ்சித்(வயது29) , காரைக்கால் லத்தீப் நகரை சேர்ந்த மொஹம்மத் அபிரிடியுடன்(23) இணைந்து, சென்னையில் இருந்து காரைக்காலில் உள்ள சிறு சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் கஞ்சா சப்ளை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால், இருவரும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சென்றுவிட்டதாக கிடைத்த தகவலின் பேரில், தரங்கம்பாடி சென்று, அங்கு பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிமிடருந்து ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • திண்டுக்கல்லில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்
    • சாலை பணியை விரைவு படுத்த பொதுமக்கள் கோரிக்கை

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு கம்பிகள் பொருத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்த பணியும் நடக்கவில்லை.

    இருபுறமும் ஒரு கார் அல்லது ஆட்டோ மட்டுமே செல்ல வழி உள்ளது. மற்ற வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சரளைக் கற்கள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டி உள்ளது. கடந்த 1 மாதமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு இருந்த காலத்திலேயே இப்பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் மிகுந்த சிரமத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்.

    இரவு நேரங்களில் எந்தவித எச்சரிக்கை பலகையும் இல்லாததால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்லும் இந்த சாலையில் ஆபத்தை உணராமல் வாகனங்கள் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    ×